Total Pageviews

668

Tuesday, 31 December 2019

திருப்பாவை 7








அந்திக்கருக்கலில் கீச்கீச் சென்று பறவைகள் இரைச்சலிட்டு அடங்கிவிடும் : தூங்கிவிடும்

ஆனால் அக்கா அதிகாலையில் பறவை பேசியதாக அதுவும் ஆனைச்சாத்தன் என்றொரு புதுப்பேரையும் சொல்கிறாளே

அக்கா ஆடுமாடுகள் மேய்த்தவர்களுடன் எப்போது அணுபவம் பெற்றாள் என தெரியவில்லை

மலையோரங்களில் வாழும் ஒரு பறவை செம்போத்து

அது அதிகாலையில் கீச் கீச் என அகவிக்கொண்டே பறந்து சஞ்சீவி மூலிகையை தேடி கொழுந்தை சாப்பிடும் என்பார்கள் ஆயர்கள்

இந்தப்பறவை அரிதானது ; அதன் கூட்டில் சஞ்சீவியின் குச்சிகள் இருக்கும் என்பது நம்பிக்கை

இதனுடைய குரல் வெகுதூரம் கேட்கும்

ஆகவேதான் ஆனைச்சாத்தன் என அக்கா சொல்கிறார்

வலிமையான சத்தத்தை கேட்டு கிடைக்கு காவல் உள்ளோர் முழித்துக்கொள்வர்

சாத்தன் என்றால் பாதுகாக்கிற போர்த்தெய்வம்

செம்போத்து துஷ்ட மிருகங்களை மிரட்டி எச்சரிக்கை செய்யும் இயல்புள்ளது

ஆயர்களுக்கு தோழன் போபோல

இந்தப்பாடல் முழுவதும் நாராயணனை நம்புவோர்க்கு வசதி வாய்ப்புகள் கூடுமென்கிறாள்

காசும் பணமும் கலகலக்கும் தொழில் தயிரை கடைந்து வெண்ணெய் எடுத்தல்

செல்வசெழிப்பான குடும்பத்தில் செல்லமாக வளர்க்கப்படும் வாலிபப்பெண்ணே

தயிர்கடையும் சத்தம் உன்னை எழுப்பவில்லையோ

கேசி என்ற அரக்கணை கொன்ற கேசவனை கோயிலில் புகழ்ந்துபாடும் சத்தம் கேட்கலியோ

பொருளும் வேண்டும் அருளும் வேண்டும்

தயிரும் கடையனும் கேசவனையும் வேண்டனும் என்கிறாள் கோதை அக்கா

No comments:

Post a Comment