Total Pageviews

Tuesday 31 December 2019

திருப்பாவை 2


வையத்து வாழும் மனிதர்களாகிய சிறுவர்களுக்கு தாம் கொடுக்கும் செயல்முறை வேதாந்த உபதேசங்கள் திருப்பாவை என்கிறார் கோதை அக்கா

பாவை என்றால் பருவவயதை தொடாத பெண்பிள்ளை என்பதாம்

கள்ளம் கபடம் பேதம் உணராதவள்

பதின் ..
பத்து வயது சிறுமி!
பருவம் எய்தா .
பூப்பெய்தா சிறுமி

ஆன்ம வாழ்வில் அறியாமையால் ஆத்மாக்கள் உழன்று வருகின்றன

மார்க்கத்துக்கு ஒரு கடவுள் இருப்பதாகவும் எங்காளுதான் ஒரிஜினல் எனவும் சிறுவர்கள் நிணைக்கிறார்கள்

திருப்பாவையும் திருவெம்பாவையும் இறைவன் ஒருவனே என சிறுவர்களுக்கு செப்புகின்றன

சீர்மல்கும் ஆய்பாடி செல்வ சிறுமீர்காள் என முதல் பாடலிலேயே அக்கா சுட்டுகிறாள்

திருப்பாவை 30 ம் ஏலோரெம்பாவாய் என என் பாவையே என சிறுமியர்க்கு அறிவுரையாகவே பகரப்பட்டுள்ளது

திருவெம்பாவை 15 ம் ஏலோரெம்பாவாய் என என் பாவையே என சிறுமியர்க்கு அறிவுரையாகவே பகரப்பட்டுள்ளது

ஏல் ஓர் எம் பாவாய் என்பதே ஏலோரெம்பாவாய் என சொற்றொடர் ஆயிற்று

ஏல் என்றால் யூதபாஷையில் இறைவன்

என் மகளே இறைவன் ஒருவனே என்பாயாக என்பதே ஏலோரெம்பாவாய் சொற்றொடரின் அர்த்தம் - பரிபாஷை

கோதை அக்கா ராமானுஜர் போன்ற பெரியவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஜோதியாக மாறி மறைந்து போனவர்

அவர் உடலோ ; சாம்பலோ கிடைக்கவில்லையே

அதேபோல சிதம்பரத்து பூசாரிகள் பலர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஜோதியாக மாறி மறைந்து போனவர்

அவர் உடலோ ; சாம்பலோ கிடைக்கவில்லையே

ஸ்தூல உடம்பை ஒளி சரீரமாக மாற்றும் தகுதி பெற்றோர் மரணமில்லா பெரு வாழ்வு என்ற தேவராக மாறுகிறார்கள் என வள்ளல் பெருமான் இதற்கு விளக்கம் கொடுத்தார்கள்

மனிதர்கள் அடையக் கூடிய உண்ணத நிலையை அடைந்தவர்கள் ஆண்டாளும் மாணிக்க வாசகரும்

இருவரும் சித்தி அடையும் முன்பு பாடியவையே ஏலோரெம்பாவாய் பாடல்கள்

கோவிலில் பூசாரி தீபாராதனை செய்யும் போது வழிபாடு செய்வது சரியை என்ற தாழ்ந்த நிலை

அப்படியில்லாமல் செய்கையால் ; உழைப்பால் ; வாழ்வால் இறைவனை நோக்கி வளர்வது கிரியை

உலகத்தார் உய்யுமாறு எண்ணி நான் கொடுத்த கிரியை பாவை நோன்பு என்கிறார் கோதை அக்கா

தேவர்களுக்கு அதிகாலை ஆகிய மார்கழி மாதம் முழுதும் அதிகாலை நீராடி அலங்காரங்களை தவிர்த்து தூய்மை விரதங்களை மனிதர்கள் மேற்கொள்ள வேண்டும்

பால் வெளி மண்டலத்தில் பிரபஞ்சம் மெல்ல இயங்கிக்கொண்டுள்ளது ; ஆனால் பிரபஞ்சம் ஜடாப்பொருளால் ஆனது

ஜடமாக இருந்தாலும் இயங்கிக்கொண்டுள்ளது

அவனே பரமன் - பரமாத்மா

அவன் சகலவற்றிக்கும் அடைப்படை - ஆதிமூலமாக இருப்பவன்

அவனை சற்குருவாக வைத்து இறைவனை தொழுதுகொள்ள வேண்டும்

ஏனென்றால் இறைவனின் வார்த்தை ஆனவன் நாராயணன்

உலகம் உய்யுமாறு காலம் காலமாக நாட்டுக்கு நாடு ஆங்காங்கு பகுதி பகுதியாக வேத ஆகமங்களை இறைவனே கொடுத்து வருகிறார்

அந்த வேதங்களை இறக்குபவர் நாராயணன் - ஜிப்ராயீல் - காப்ரியேல் என்ற அதிதேவர் என குரானிலும் பைபிளிலும் கூட சொல்லப்பட்டுள்ளது

ஆனால் கலிகாலம் முடியாததால் ; சத்திய யுகத்திற்கான காலம் கனியாததால் முழுமையான சமரச வேதம் வெளியாக்கப்படவில்லை

நாட்டுக்கு நாடு சமுதாய பண்பாடுகள் மாறுபாடானவை ஆதலால் அவர்களுக்குக்காக கொடுக்கப்பட்ட வேதத்தை அடுத்த நாட்டில் கொண்டுவந்து திணித்து மல்லுக்கட்டிக்கொண்டு மனித சிறுவர்கள் மண்டைகளை உடைக்கிறார்கள்

ஆனால் ஐயங்களை தீர்த்து அருளை கருணை கொடையாக்கி சமாதானம் சாந்தியை நிலை நிறுத்தும் சமரச வேதம் விரைவில் வெளியரங்கமாகும்

No comments:

Post a Comment