Total Pageviews

Tuesday 31 December 2019

திருப்பாவை 18





உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய் 

வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண் 

வந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப 

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். 


எதிரிகளை கண்டு ஓடாமல் 
மதயானை போல துரத்துகிற வலிமையான தோளை உடைய நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்


கோதை அக்காவிடம் வார்த்தை விநயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்

கூட்டத்தோடு கூட்டமாக கிறிஸ்ணனின் முதல் மனைவியை எழுப்பலாம் அல்லவா

நக்கவிநயம் பிடிச்சுட்டாள்னா

ஆகவே தனி ஆவர்த்தனமாக கட்டம் கட்டி கவணமாக எழுப்புகிறாள்

முதலில் சுபத்ரையை கைக்குள் போட்டுக்கொள்ள ஐந்தாறு பாட்டு பாடினாள்

அவ விட்டுக்கொடுக்க மாட்டாள் அல்லவா

அதே போல நப்பின்னையை புகழ்கிறாள்

கந்தம் தூபத்தால் நறுமணம் கமழும் குழல்களை உடையவளே

கோழி விடாமல் கூவுகிறதே கேட்டாயோ

உன் வீட்டில் நீ அமைத்துள்ள மாதவிப்பந்தலில் பல வகையான விசேஸ மலர்கொடிகளில் வாசம் செய்யும் குயிலிணங்கள் கூவி இன்னிசை பரவுகிறதே

கந்தரலங்காரத்தில் இதழி என்றொரு வார்த்தை வரும் அது ஏதென்றால் நாக்கை மையமாக வைத்து வாழும் பாம்பை குறிக்கும்

அதுபோல எதுகை மோனையாக விரலி என்ற வார்த்தையை பெண்களை குறிக்க பயன்படுத்துகிறாள் அக்கா ; அக்காலத்தில் பெண்கள் வீட்டுவேலை மட்டுமே செய்வார்கள் ; அவர்களுக்கு விரல் தானே மூலதனம் ; ஆகவே விரலி


சொற்சுவை என்பது இதுதான்

வந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட

உன் வீட்டுக்காரரைபுகழ்ந்துபாடி பரிசில்கள் பெற பெண்கள் வந்திருக்கிறார்கள்

செந்தாமரை போன்ற உன் கைகளில் வளையல்கள் சிறப்பாக ஒலிக்க வந்து உள் வாசலை திறந்து அவனை தரிசிக்க விடு

நான் முதலில் வேண்டாம் என்று நினைத்தேன் ; இப்பாட்லில் விரலி என்றால் பெண்கள் என்றொரு வார்த்தையை சொன்ன அக்கா இன்னொரு தமிழ் முத்தையும் மரியாதை செய்கிறாள்

அது மாதவி என்ற நவரத்தினம் . அவள் குடிப்பிறப்பு கணிகையர் குலமாக இருக்கலாம்

ஆனால் சேற்றிலே முளைந்த செந்தாமரை

பேரழகி மட்டுமல்ல மாபெரும் தபஸ்வீணி அவள்

கர்மாவை கழிக்க மாதவியாக வந்து பிறந்தாலும் ; கோவலன் ஒருவனுக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவள்

அக்காலத்தில் பலதார மணம் உண்டு

தன்னை மணந்து அந்தஸ்தோடு வாழ வை என சொல்லக்கூட தெரியாமல் ; தன் தாயாரின் வியாபார உத்திக்கு பலியாகி கோவலனின் பொருளாதார வாழ்வு சீர்கெட காரணமானாள்.

ஆனால் கோவலனுக்கு பின்பு உலகை வெறுத்து மனதார சமண துறவி ஆகி மாபெரும் நோன்பு நோற்றவள்

மா தபஸ்வி என்பதே மாதவி ஆகும்

பெயருக்கு ஏற்ப மா தபஸ்வீயாக வாழ்ந்து அட்சய பாத்திரம் அடையப்பெற்ற மணிமேகலையின் தாய் என்ற ஸ்தானம் பெற்றவள்

அட்சயபாத்திரம் வரமாக அடையப்பெறுவது சாதாரண விசயமா

தமிழின் அடையாளங்களுள் மணிமேகலையும் அவள் தாய் மாதவியும் ஒன்று

மாதவியை இங்கு மகிமைப்படுத்தியுள்ளாள் கோதை அக்கா



No comments:

Post a Comment