கன்றுக்குட்டியை உடைய எருமை தன் கன்றை நினைத்து இரக்கம் கொள்கிறதாம்
கனைத்து அழைக்கிறதாம்
குட்டிக்கு பசிக்காத்தால் அது தாவி வரவில்லையாம்
ஆனாலும் தாய் நினைத்து பாலை சொரிகிறதாம்
அப்படி தானாய் சொரிந்த பாலால் வீடு சேறாகி விடுகிறதாம்
அவ்வளவு மிகுதியான பாலை திரட்சியாக உடையவன் என்றால் அவன் பெரிய செல்வந்தன் அல்லவா
செல்வச்சீமான் பலராமனின் தங்கையே
சுபத்ரையே
பனிபெய்து ஈரமான தலையோடு உன் வாசலில் நிற்கிறோம்
அனைத்து இல்லத்தாரும் உன் பேருறக்கத்தை பற்றி கோள் பேச இடம் கொடுக்கலாமா
தென் இலங்கையிலிருந்து புஸ்பக விமானத்தில் ஆங்காங்கு வந்து இராவணன் செய்த அக்கிரமங்களை அடக்கி நம்மை காத்த மனத்துக்கு இனியவர்களை பாடவேண்டாமோ
கோதை அக்கா கோடாங்கி அடித்துத்தான் சுபத்ரையை எழுப்புகிறாள்
அது ஏதென்றால் இராவணனை அழித்தது இராமர் மட்டும் அல்லவே
அந்த லஷ்மணன்தானே அர்ச்சுனராக அவதரித்தார்
அவரின் காதல் மனைவியல்லவா சுபத்ரை
உன் மனத்துக்கு இனியானை பாடவும் வாய் திறவாய்
No comments:
Post a Comment