சுபத்ரையை எழுப்புவதற்கே கோதை அக்கா பெரும்பாடு பட்டிருக்கிறாள்
9 ஆம் பாடலில் கண்டிப்பு காட்டியதால் தூக்கம் கலைந்து விட்டாலும் 10 ஆம் பாடலில் நாலு வார்த்தை புகழ்ந்து எழும்பி உட்கார்ந்து விட்டாள்
ஆனாலும் படுக்கையை விட்டு இறங்கவில்லை
ஆகவே அவளை சரிக்கட்ட மேலும் புகழ்கிறாள் அக்கா
பசுக்களை திரட்சியாக கொண்டிருந்தாலும் அவைகளை திறமையாக பால் பீய்ச்ச வேண்டுமாம்
அதை திறமையாக கற்றவரும் ; தங்களை வீண் வம்புக்கு இழுப்பவரை அடக்கும் வல்லமையும் கொண்டவரும் வேறெந்த குற்றமும் இல்லாதவருமான ஆயர்பாடியின் அரசரான நந்தகோபருடைய பொற்கொடியே
நல்ல பாம்பின் படத்தை போன்ற அழகிய அக்குலை உடையவளும் அலங்கரிக்கப்பட்ட மயிலை போன்றவளுமே இணக்கம் அடைக
அண்டை அயல் தோழிமார்கள் உன் முற்றம் வந்து உன் அண்ணன் புகழ் பாடுகிறார்கள்
சின்ன சிவன் அர்ச்சுணனின் மனைவியாகும் தகுதி பெற்றவளே சிடுசிடுக்காமல் எழுந்து வா
No comments:
Post a Comment